ஜெயேந்திரரின் ஜாமீன் நிபந்தனை ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக ஜெயேந்திரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிபந்தனைபடி அவர் காஞ்சிபுரம் விசாரணை அதிகாரி சனிக்கிழமை தோறும் முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி நிபந்தனையை தளர்த்தி இன்று உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications