For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: கைதிகளின் கோரிக்கை மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தங்கள் மீது தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி 70கைதிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த வழக்கு தொடர்பாகஅல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அபுதாகீர் உள்ளிட்ட 70 கைதிகள், தங்கள் மீதுள்ள புகார்களை தனி வழக்காகப் பிரித்து அதற்கு தனியாககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை தனியாகப் பிரித்து தனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, ஒரே வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியஅவசியமில்லை. இந்த வழக்கை இரண்டாக பிரித்ததை ரத்து செய்கிறேன். ஒரே வழக்காகவே இது நடத்தப்படவேண்டும் என்றுகூறி கோவை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X