பெட்ரோல் விலை உயராது: அய்யர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில்பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது.
இந்தியா 70 சதவீத பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றாலும் கூட விலை கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.கடந்த 6 மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது. இப்போதைய விலை நிலவரமே தொடரும்.
காவிரிப் படுகைப்பகுதிகளில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் இருக்கிறதா என்பது குறித்து ஆராயநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அய்யர்.












Click it and Unblock the Notifications