சுமத்ரா தீவில் இன்றும் 2 முறை நில நடுக்கம்
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று இரண்டு இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ரா தீவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் 26ம் தேதிக்குப் பிறகு இதுவரைபலமுறை இங்கு நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமத்ரா தீவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6ஆக பதிவானது. பூமத்திய ரேகையின் வடக்குப் புறத்தில் 0.4 டிகிரி பகுதியிலும், கிழக்குப் புறத்தில் 96.7 டிகிரி பகுதியிலும் இந்தநில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அதிகாலை 3.50 மணியளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.1 ஆகபதிவாகியிருந்தது. இதே போல நேற்றும் இங்கு 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது.