15 ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாட்டம்
சென்னை:
தமிழகத்தில் இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் கண்காணிப்பு இணை இயக்குனர் அனூப் ஜெய்ஸ்வால், சென்னை நிர்வாக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.பாஸ்கர், சென்னை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சிஐடி டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த சிதம்பரசாமி, காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி.தாமரைக்கண்ணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், திருச்சி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்.பி.ஜே.ராஜேந்திரன், ராமநாதபுரம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த அஷோக் குமார் தாஸ், தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) எஸ்.பி.கே.சங்கர், கரூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த அபின் தினேஷ் மோடக், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை எஸ்.பி. ஏ.பாரி, அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலக பாதுகாப்பு துணை ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி, திருவண்ணாமலை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக துணை ஆணையர் அபி பிரகாஷ், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கி மலை துணை ஆணையர் சந்தீப் மிட்டல் மதுரை மாநகர தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உள்துறை செயலாளர் பவன் ரெய்னா அறிவித்துள்ளார்.