For Daily Alerts
Just In
கடலில் மிதந்து வந்த புத்தர் சிலை
கடலூர்:
கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த அழகிய புத்தர் சிலை மீட்கப்பட்டது.
மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட இந்த புத்தர் சிலையின் இரு கைகளும் உடைந்துள்ளன.
நீண்டகாலமாக இந்த சிலை கடலில் மிதந்து வந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இச் சிலையை கண்டெடுத்த மக்கள் அதைசோனாக்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் வைத்தனர்.
சிலை குறித்துத் தகவல் கிடைத்ததும், தாசில்தார் மாரிமுத்து வந்து பார்வையிட்டுவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங்பேடிக்கும் தகவல் தந்தார்.
பேடியின் உத்தரவின்பேரில், சிலையை போலீஸ் உதவியுடன் தாசில்தார் எடுத்துச் சென்றார். விரைவில் இது அரசுஅருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.
சுனாமியைத் தொடர்ந்து இந்த சிலை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதோ ஒன்றிலிருந்து அடித்து வந்திருக்க வேண்டும் எனஅதிகாரிகள் கருதுகிறார்கள்.
Comments
Story first published: Wednesday, April 6, 2005, 5:30 [IST]