சென்னை:மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடிசோதனை
சென்னை:
சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினார்கள். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 60 நகரங்களில் உள்ள சுங்க இலாகா, வருமான வரித்துறை உட்பட மத்திய அரசில் உயர் பதவியில்இருப்பவர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் வீடுகளில் மறைத்து வைத்திருந்த ஏராளமான சொத்துக்கள் தொடர்பான முக்கியஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
சென்னையில் இந்திய உணவுக் கழக தென்பிராந்திய மேலாளர் ஆச்சார்யாலுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைநடத்தப்பட்டது.
சேலத்தில் மத்திய கலால் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருக்கும் குமார் என்பவரின் வீட்டில் சோதனைநடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பல சொத்துகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் உச்சநீதிமன்ற துணை போலீஸ் கமிஷனர் பரூக்கி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் (கணக்கு) சஞ்சய் குமார்ஷா மற்றும் ஒரு வருமான வரித்துறை உயரதிகாரி ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
துணை போலீஸ் கமிஷனர் பரூக்கியின் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சம் பணமும், 1 கிலோ தங்க நகையும்கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications