சென்னை:மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடிசோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினார்கள். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 60 நகரங்களில் உள்ள சுங்க இலாகா, வருமான வரித்துறை உட்பட மத்திய அரசில் உயர் பதவியில்இருப்பவர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் வீடுகளில் மறைத்து வைத்திருந்த ஏராளமான சொத்துக்கள் தொடர்பான முக்கியஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சோதனை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications