சென்னையில் நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உலகப் புகழ் பெற்ற நோக்கியா செல்போன் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை அமையவுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அவர் இதுகுறித்துக் கூறுகையில், தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்தத் தேவையானஅனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்தி வருகிறது.

இதன் எதிரொலியாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.

முதல்கட்டாக நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பு நிறுவனம்மற்றும் துணை பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளது.

நோக்கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் இது முதல் தயாரிப்பு நிறுவனமாகும். உலக அளவில் 10வது தயாரிப்பு நிறுவனமாகும்.செல்போன் தயாரிப்புக்கு ரூ. 675 கோடியும், துணை பாகங்கள் தயாரிப்புக்கு ரூ. 675 கோடியும், ஆக மொத்தம் ரூ. 1350 கோடிமொத்த முதலீட்டில் தயாரிப்பு தொழிற்கூடத்தை நோக்கியா நிறுவனம் தொடங்குகிறது.

இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 1200 பேருக்கும், மறைமுகமாக 6000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்ஜெயலலிதா.

முன்னதாக, தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில்நோக்கியா நிறுவன உயர் அதிகாரிகளும், தமிழக அரசின் தொழில்துறை செயலாளரும் கையெழுத்திட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+