புதுக்கோட்டையில் அனைத்து மகளிர் மசூதி!
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பெண்களுக்கான தனி மசூதி விரைவில் கட்டப்படவுள்ளது.
தமிழகத்தின் முதல் பெண்கள் ஜமாத் ஆகும் இது. இதன் முயற்சியால் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்றஇடத்தில் பெண்களுக்கான தனி மசூதி கட்டப்படவுள்ளது.
இதுகுறித்து ஷரீபா கான் கூறுகையில், முஸ்லிம் ஜமாத்துகளில் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஷரீ அத் சட்டம்பெண்களுக்கு ஆதரவாக இல்லை. அதிலுள்ள குறைகளைக் களையும் பொருட்டும், ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து பெண்கள்விடுபடும் பொருட்டும்தான் இந்த ஜமாத்தை ஆரம்பித்தோம்.
எங்களது ஜமாத்தின் சார்பில் பரம்பூரில் பெண்களுக்கான மசூதியை கட்டவுள்ளோம். அதற்கான இடத்தைத் தேர்வு செய்துவிட்டோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
முதலில் இந்த இடத்தை எங்களுக்குக் கொடுத்த உள்ளூர் ஜமாத், பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இருப்பினும்இப்பிரச்சினையை சமாளித்து வேறு ஒரு இடத்தை தற்போது தேர்வு செய்து விட்டோம். இது எங்களது பெண்கள் ஜமாத்துக்குக்கிடைத்த முதல் வெற்றியாகும் என்றார் ஷரீபா கான்.
முன்னதாக நடந்த முஸ்லிம் பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகள்வைக்கப்பட்டன. முஸ்லிம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும், முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்றபட்டியலிலிருந்து விலக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,
தொலைபேசி, இ மெயில், தபால் மூலம் தலாக் (விவாகரத்து) சொல்லுவதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், ஜமாத்துகள்மூலம் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாககொண்டு வரப்பட்டன.












Click it and Unblock the Notifications