அமெரிக்கா: பல்கலையில் டிஎன்ஏ திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைது
ஹூஸ்டன்:
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து டி.பி. ஏற்படுத்தும் வைரசின் டிஎன்ஏவை திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைதுசெய்யப்பட்டார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் இந்த ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதியுடன் இவரது ஆராய்ச்சிப்படிப்பு முடிந்து இந்தியா திரும்ப இருந்தார்.
இந் நிலையில் 22ம் தேதி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பிடிபட்டார். டிபியை (tuberculosis organism) ஏற்படுத்தும்வைரசின் டி.என்.ஏக்கள் அடங்கிய குடுவைகள் (vials) மற்றும் அதன் விவரங்கள் அடங்கிய சிடிக்களுடன் இவர் சிக்கினார்.
அவர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரதுபாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.
3,500 டாலர்கள் கட்டி ஜாமீனில் அவர் விடுதலையாகலாம் என அந்த மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் அவர்ஆரஞ்ச் கவுண்டி பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த டிபி வைரஸ் டிஎன்ஏவைக் கொண்டு மருந்து மட்டுமல்லாமல் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கவும் முடியும் எனபல்கலைக்கழகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications