தமிழ்நாடு மருத்துவமனையை அபகரிக்க ஜெ திட்டம்: ஜெயேந்திரர் பகிரங்க புகார்
டெல்லி:
சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையை தனது கட்டுப்பாட்டில் எடுக்கவே என் மீது ஜெயலலிதா பொய்யானகொலை வழக்குத் தொடர்ந்துள்ளார் என ஜெயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா வேண்டுமென்றே என்னை பழி வாங்குகிறார். பல கோடி மதிப்புள்ள தமிழ்நாடு மருத்துவமனை சென்னைக்கு அருகேசெயல்பட்டு வருகிறது. அது இப்போது காஞ்சி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மருத்துவமனையை கைப்பற்ற ஜெயலலிதா முயல்கிறார். அதற்காகவே என் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி. பிரேம்குமாரை நியமித்ததில் கூட உள்நோக்கம் உள்ளது. கடந்த லோக் சபா தேர்தலின்போதுஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பிரேம்குமார் மீது தேர்தல் கமிஷனே குற்றம் சாட்டியுள்ளது.
அதிமுக ஆதரவாளரான அவரால் எப்படி நடுநிலையோடு இந்த வழக்கை விசாரிக்க முடியும்?
தமிழக அரசின் அனைத்து அங்கங்களுமே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே வழக்கை வேறுமாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு ஜெயேந்திரர் கூறியுள்ளார்.