சுனாமி நிவாரணம்: ராணுவம் மீது புலிகள் புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதைஇலங்கை ராணுவத்தினர் தடுத்து வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் புகார் கொடுத்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து புலிகளின் மட்டக்களப்பு கமாண்டர் கலோனல் பானு மற்றும் கொக்கடிச்சோலை பகுதி புலிகளின்அரசியல் பிரிவு தலைவரான இராசையா இளந்திரையன் ஆகியோருடன் நார்வே அமைதிக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது இலங்கை ராணுவத்தின் படைப் பிரிவான எஸ்.டி.எப், தங்களை சுனாமி நிவாரணப் பணிகள் செய்ய விடாமல்தடுப்பதாக புலிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ராணுவத்தினருடன் ஆலோசனை நடத்துமாறு புலிகளிடம் நார்வே அமைதிக்குழுவினர் அறிவுறுத்தினர்.

ஆனால், அது போன்ற ஆலோசனைகள் கடந்த காலத்தில் வீணாய் போனதை சுட்டிக் காட்டிய புலிகள், கொடுத்த வாக்குறுதிகளைநிறைவேற்றும் ராணுவ அதிகாரிகளுடன் மட்டுமே பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைகளின்போது போர் நிறுத்ததையும் மீறி இலங்கை ராணுவத்தினர் மறைமுகமாக நடத்தி வரும் தாக்குதல்கள்,கொலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ராணுவத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் புலிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+