பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதில், ஊராட்சிகளில் பணியாற்றும் முழு நேர மற்றும் பகுதி நேர எழுத்தர், துப்புறவுத் தொழிலாளர்கள், மேல்நிலைத் தொட்டியைபராமரிப்பவர்கள் ஆகியோருக்கு ஏப்ரல் 1ம் தேதி தல் ரூ. 200 ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
இதன்படி முழுநேர எழுத்தர்களின் ஊதியம் ரூ. 1,800லிருந்து ரூ. 2,000 ஆகவும், பகுதி நேர எழுத்தர்களின் ஊதியம் ரூ.800லிருந்து ரூ. 1,000 ஆகவும், மேல் நிலைத் தொட்டியை பராமரிப்பவர்களின் ஊதியம் ரூ. 400லிருந்து ரூ. 600 ஆகவும்,துப்புறவுத் தொழிலாளர்களின் ஊதியம் ரூ. 600லிருந்து ரூ. 800 ஆகவும் உயருகிறது.
இதுதவிர, மேல் நிலைத் தொட்டி பராமரிப்பாளர்கள், கூடுதலாக பராமரிக்கும் ஒவ்வொரு மேல் நிலைத் தொட்டிக்கும் ரூ. 250வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வு மூலம் கடை நிலையில் உள்ள 62,831 பஞ்சாயத்து ஊழியர்கள் பலனடைவார்கள். இதன்மூலம் அரசுக்குஆண்டுக்கு ரூ. 16.24 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications