For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்கிறார் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம், மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை ஏப்ரல் 15ம் தேதிடெல்லியில் கூட்டியுள்ளது.

மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். நக்சலைட்கள் பிரச்சினை, போதைப் பொருள் தடுப்பு, தீவிரவாதிகள்ஊடுறுவல், காவல்துறை நவீனமமயாக்கம் மற்றும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இம் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கவுள்ளார். இதற்காக ஏப்ரல் 14ம் தேதி மாலை அவர் டெல்லி செல்கிறார். அவருடன்தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர் அடங்கிய உயர் மட்டக் குழுவும்டெல்லிக்கு செல்கிறது.

டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா தனியே சந்தித்தும் பேசுகிறார்.

அப்போது சுனாமி நிவாரண நிதியுதவி வழங்கப்படுவதில் நிலவும் தாமதம், தமிழகத்தில் அமையவுள்ள நோக்கியா தொழிற்சாலைக்குமத்திய அரசின் அனுமதி சான்றிதழ் வழங்குவது, மத்திய தொழில்துறையின் வாகன சோதனை மையத்தை தமிழகத்தில் அமைக்கவலியுறுத்துவது, காவல்துறையை நவீனமயமாக்க கூடுதல் நிதியுதவி கோரிக்கை ஆகியவை தொடர்பாக சிங்குடன் அவர்விவாதிக்கவுள்ளார்.

சமீபத்தில் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமையிலான குழு டெல்லி சென்று ரா அதிகாரிகளை சந்தித்து ரகசிய ஆலோசனைகள் நடத்திவிட்டுத்திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X