தமிழர் விடுதலை இயக்க நக்சலைட் கைது
ஜெயங்கொண்டம்:
அரியலூரில் பாலத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்ட தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அருள்மணி என்றநக்சலைட்டை போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் செந்துரை அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை போலீஸார் மறித்து விசாரணை நடத்தினர். அவரது மோட்டார் சைக்கிளில் சோதனையிட்டபோது ஏராளமானடெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் சிக்கின.
விசாரணையில், அவரது பெயர் அருள்மணி என்பதும், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு என்றகிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
தமிழர் விடுதலை இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அரியலூர் மருதையாற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்க்கும்நோக்கத்தோடு அவர் சென்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அருள்மணி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.