For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா செல்ல வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமெரிக்கா செல்ல பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வைகோ கடந்த 2003ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் வைகோமற்றும் மதிமுகவைச் சேர்ந்த 8 பேர் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுதலை ஆகினர்.

இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொடா மறு ஆய்வுக் குழு, வைகோ மீதானவழக்கை தள்ளுபடி செய்யக் கூறியும் இன்னும் வழக்கை விசாரணையில் வைத்துள்ளது தமிழக அரசு.

ஜாமீன் நிபந்தனைப்படி வைகோ தனது பாஸ்போர்ட்டை பொடா நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள தனது மகளின் குடும்பத்தினரை சந்திக்க வைகோ அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ், கடந்த 4ம் தேதி பொடா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், வைகோ அமெரிக்கா செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு வசதியாக பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் பரிசீலித்து, மே 16ம் தேதி முதல் 3 வார காலம் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.வைகோவின் பாஸ்போர்ட் வரும் 11ம் தேதி அவரிடம் வழங்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

பொடாவில் கைதாகி விடுதலையான பிறகு ஏற்கனவே ஒருமுறையும் நீதிமன்ற அனுமதி பெற்று வைகோ அமெரிக்கா சென்று திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது தான் அவரை விமான நிலையத்திலேயே வைத்து தமிழக அரசு கைதுசெய்தது என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X