முன்னாள் காங். தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் மரணம்
சென்னை:
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், சென்னையில் இன்று மரணமடைந்தார்.
81 வயதான சுப்பிரமணியம், 1952ம் ஆண்டு திமுக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு முதன் முதலாக சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு திமுகவில் சேர்ந்த இவர், 1960ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின்தமிழ் தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் உடல் அவரது சொந்தஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பன்மடல் கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
இறுதிச் சடங்கு நிகழச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இவரது மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது.