For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தஞ்சை மண்டல மாநாடு: நாளை தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தஞ்சை மண்டல திமுக மாநாடு தஞ்சாவூரில் நாளை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்றிரவுரயில் மூலம் செல்கிறார்.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டல மாநாடு, கடந்த இரு வாரங்களுக்கு முன்நடக்க இருந்தது. ஆனால் இப்பகுதியில் கடுமையான மழை பெய்ததால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு நாளை தொடங்குகிறது. காலை 9மணியளவில் நாகூர் அனிபாவின் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி, இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து மலைக்கோட்டைஎக்ஸ்பிரஸ் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல் நாள் மாநாட்டுக்கு துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அன்று மாலை 4 மணியளவில் மாநாட்டு தீர்மானங்கள்நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.

இரண்டாம் நாள் மாநாடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 10 மணி முதல் மு.க.ஸ்டாலின் உட்படகட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர்.

மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டுகம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் நல்லக்கண்ணு,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா,மூமுக தலைவர் டாக்டர் சேதுராமன், பேராயர் எஸ்ரா சற்குணம், நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் எம்.எல். ஏ. உட்பட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X