For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனாட்சி கோவிலில் குண்டு: பெண் உள்பட 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரம் அருகே உள்ள செருப்புக் கடையில் வெடிகுண்டுகளை வைத்த பெண்உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுர வாசல் அருகே செருப்புகளைப் பாதுகாக்கும் இடத்தில் கடந்த 14ம் தேதி இரண்டுவெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். வெடிக்காத நிலையில் இருந்த இவற்றை மாநகர காவல் ஆணையர்அலுவலகத்திற்குக் கொண்டு சென்று செயலிழக்கச் செய்தனர்.

சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் கோவிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வெடிகுண்டுகளை வைத்த நபர்களைப் பிடிக்க காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்துபோலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

செருப்புக் கடை அருக பூஜைபொருட்கள் விற்கும் கடையை வைத்திருந்த துரைப்பாண்டியின் மகள் கவிதா, வெடிகுண்டு வைத்தநபர்கள் குறித்த சில அடையாளங்களைக் கூறியிருந்தார்.

அந்தத் தகவல்களின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து குற்றவாளிகளை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்.இதன் விளைவாக தற்போது ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆணையர் விஜயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், துரைப்பாண்டி, அவரது மனைவி தமிழ்ச் செல்விஆகியோருக்கும், எதிரே பிளாட்பாரத்தில் பூஜை பொருட்கள் விற்கும் கடையை வைத்திருந்த பூங்கொடி அவரது கணவர் ஆறுகம்ஆகியோருக்கு இடையே ஏற்கனவே தொழில் பாட்டி இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த மார்ச் 7ம் தேதி இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக துரைப்பாண்டியும், அவரதுமனைவியும் மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பூங்கொடி,ஆறுமுகம் மீது வழக்கும் பதிவாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடியும், ஆறுகமுகமும், துரைப்பாண்டி தம்பதியை பழி தீர்க்க யோசித்துள்ளனர். அப்போதுஅவர்களது உறவினர் பூபதி என்பவர், துரைப்பாண்டி கடையில் வெடிகுண்டுகளை வைத்து போலீஸில் மாட்டி விடலாம் என்றுயோசனை தெரிவித்துள்ளார். இதை பூங்கொடியும், ஆறுமுகமும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் துளசி, ஜெயக்குமார் ஆகியோரை பூபதி அழைத்து வந்துள்ளான்.அனைவரும் கூடிப் பேசி 2 நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து அதை துரைப்பாண்டியின் கடையில் வைத்து விட்டுபோலீஸுக்குத் தகவல் சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துளசியிடம் பூங்கொடி ரூ. 300 கொடுத்து வெடிகுண்டுகளைத் தயாரிக்க கூறியுள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட துளசியும், ஜெயக்குமாரும், நேதாஜி சாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கடைக்குச் சென்று பட்டாசுகள் வாங்கியுள்ளார்.

பின்னர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு அவர்கள் சென்றனர். அங்கு வைத்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். பின்னர்அந்த வெடிகுண்டுகளை துணியால் சுற்றி மஞ்சள் பையில் வைத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளனர்.

அவரும், பூஜை பொருட்களை வாங்கப் போவது போல துரைப்பாண்டியின் கடைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல்வெடிகுண்டுகளை அவரது கடைக்குள் வைத்து விட்டுச் சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து துளசியே போலீஸாருக்குப் போன் செய்து துரைப்பாண்டி கடையில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறுயுள்ளார்.இதைத் தொடர்ந்து போலீஸார் வந்து சோதனை நடத்தியபோதும், துளசியே முன்வந்து உதவுபவர் போல நடித்துள்ளார்.

ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த க்யூ பிரிவு போலீஸார் துளசியை தீவிரமாக விசாரித்தபோது மேற்சொன்ன தகவல்கள்கிடைத்தன. இதையடுத்து பூங்கொடி, ஆறுமுகம், துளசி, ஜெயக்குமார், பூபதி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயக்குமாரின் வீட்டில் மீதமிருந்த வெடி மருந்துகள், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.

ஏற்கனவே, கராத்தே பாண்டியராஜ் என்பவரைக் கொன்ற கும்பலுக்கும் ஜெயக்குமார், துளசிதான் நாட்டு வெடிகுண்டுகளைத்தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது என்று ஆணையர் விஜயக்குமார் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X