For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள தலைவரை சிறையில் சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நேபாள நாட்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரை ஐரோப்பிய யூனியன்வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேச சில நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான சந்திர பிரகாஷ் என்பவர் கடந்த 2003ம் ஆண்டு சென்னைவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலி பாஸ்போர்ட்டுடன் அவர் இருந்ததால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி பலமுறை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தும் அனைத்தும்தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில் சந்திர பிரகாஷை சந்திக்க வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு (ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்)அனுமதி அளிக்கக் கோரி சந்திரபிரகாஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் சந்திர பிரகாஷைசந்திக்கலாம் என்று அனுமதி அளித்தார்.

அதன்படி, சந்திர பிரகாஷுடனான சந்திப்பு குறித்த பேட்டி அளிக்கக் கூடாது, அறிக்கை வெளியிடக் கூடாது, இந்தியவெளியுறவுக் கொள்கைக்கு விரோதமாக கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறைஅமைச்சகங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X