சென்னை: ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை!
சென்னை:
சென்னை நகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பூட்டிய வீடுகளைத் தான் கொள்ளையர்கள் குறிவைத்து கொள்ளை அடிக்கிறார்கள்.
கெல்லீஸ் குட்டியப்பன் தெருவில் ராணி அபார்ட்மென்ட்ஸ் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் 9வது பிளாக்கில்முதல் மாடியில் ஐ.சி.எப்பில் வேலை பார்க்கும் கார்த்திகேயன் என்பவரது பிளாட் உள்ளது. 2வது மாடியில் காஸ் ஏஜென்சி நடத்திவரும் பாலு தயானந்தன் என்பவரது பிளாட் உள்ளது.
இருவரும் சனிக்கிழமை பணிக்குச் சென்றிருந்தபோது, இருவரின் குடும்பத்தாரும் அண்ணா நகர் டவர் பூங்காவிற்குகுழந்தைகளுடன் சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.
வீட்டின் முன் பக்க கதவைத் திறந்து உள்ளே சென்ற அவர்கள் பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். பீரோவைபார்த்தபோது அதில் வைத்திருந்த நகை, பணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
பின் பக்க கிரில் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து திருடியது தெரியவந்தது. பாலு தயானந்தன் வீட்டில் இருந்த40 பவுன் நகை, 1.04 லட்சம் ரொக்கம் ஆகியவையும், கார்த்திகேயன் வீட்டில் 12 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைதிருடப்பட்டுள்ளது.
இதேபோல, விருகம்பாக்கம் சாந்த நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது வீட்டில், குடும்பத்துடன் மும்பை எக்ஸ்பிரஸ் படம்பார்க்கச் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 10,000 ரொக்கம் ஆகியவைதிருட்டுப் போயிருந்தது.
வியாசர்பாடி கோல்டன் காம்ப்ளக்ஸ் குடியிருப்பில் வசிக்கும் ஜெயராமன் என்பவரின் குடும்பத்தினர் குடும்பத்துடன்திருவல்லிக்கேணிக்கு சாமி கும்பிட சென்றிருந்தனர்.
அப்போடு வீடு புகுந்த திருடர்கள், அங்கு இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 1500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
ஒரே நாளில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவங்களை துப்பு துலக்குவதற்காக தனிப்படைகளை அமைக்க காவல்துறைஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார். இரவு ரோந்துப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications