For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

17 தேர்தல் ஊழியர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் பணியாற்ற நியமிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் தேர்தல்பயிற்சிக்கு வராத 17 ஊழியர்களை நீக்கி விட்டு இடைத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வார்டு எண்கள் 110 மற்றும் 131வது வார்டுகளுக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 131வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடர்ந்தார்.

அதில், மாநகராட்சி இடைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள 43 தேர்தல் ஊழியர்களும் அதிமுக சார்பான அண்ணாதொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், தேர்தல் ஊழியர்கள் 43 பேரும் செயல்படுவதற்குத் தடை விதித்தார். இதை எதிர்த்துஅரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், தனி நீதிபதியின் தடை உத்தரவுக்குஇடைக்காலத் தடை விதித்தனர். இன்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட 43 பேரில்3 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள், 10 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் 4 பேர் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை. எனவே மொத்தமாக இந்த 17 பேரையும் நீக்கி விட்டுமற்றவர்களை வைத்து தேர்தலை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

இந்த யோசனையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் தேர்தல் பயிற்சிவகுப்புகளுக்கு வராத 17 பேரைத் தவிர மற்றவர்களை வைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X