தனி நீதிமன்றத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றை விசாரித்து வரும் தனிநீதிமன்றத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா பதவிக்காலத்தின்போது, வருமானத்திற்கு மீறியவகையில் சொத்து சேர்த்ததாக கூறி பல முன்னாள் அமைச்சர்கள் மீது கடந்த திமுக அரசு வழக்கு போட்டது.

இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 3 தனி நீதிமன்றங்களையும் திமுக அரசு அமைத்தது. பெரும்பாலான வழக்குகள்முடிவடைந்து விட்டதால் ஏற்கனவே 2 நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டு விட்டன. ஒரு தனி நீதிமன்றம் மட்டும் இயங்கி வருகிறது.

இந்த தனி நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி ஜெயக்குமார்உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

அதன் பதவிக்காலம் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த நீதிமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+