ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு: மே 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Tamilnadu
-Staff
By Staff
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்குநிலுவையில் உள்ளது. அதேபோல, லண்டனில் ஹோட்டல் வாங்கியதாகவும் ஜெயலலிதா, தினகரன் ஆகியோர் மீது இன்னொருவழக்கும் உள்ளது.
இந்த இரு வழக்குகளும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இரு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவும், தினகரனும் தனிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பச்சாப்பூரே முன் இன்று விசாரணைக்கு வந்தது.காலையில் விசாரணை துவங்கியதும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால்விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.இதைக் கேட்டதும் கோபமடைந்த நீதிபதி பச்சாப்பூரே, இந்த காரணங்களுக்கு எல்லாம் விசாரணையை தள்ளி வைக்கமுடியாது.வேறு வழக்கறிஞரை வைத்து வாதாட வேண்டும். விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைக்கிறேன் என்று கூறினார்.3 மணிக்கு மீண்டும் விசாரித்த நீதிபதி பச்சாப்பூரே விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் ஆஜராக வேண்டும் என்று அவர் கூறினார்.