தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்ற முடிவில் மாற்றம் இல்லை.அதேசமயம், தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து வேட்பு மனுதாக்கலுக்குப் பிறகு முடிவு செய்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் பண்டாருதத்தாத்ரேயா கூறியுள்ளார்.
இது குறித்து பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், முதலில் வேட்பு மனு தாக்கல்முடியட்டும். அதன் பிறகுதான் இந்தத் தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை குறித்துமுடிவெடுக்கவுள்ளோம்.
யாருக்கு ஆதரவு தருவது, யாருக்காக பிரசாரம் செய்வது என்பது குறித்து இப்போதுஎந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.2006 சட்டசபை பொதுத் தேர்தல்தான் எங்களது இலக்கு. அதில் நாங்கள் தனித்துப்போட்டியிடுவோம்.
மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஏராளமான அமைச்சர்கள் உள்ளனர். ஆனால்தமிழகத்திற்குக் குறிப்பிடத்தக்க திட்டம் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ள அவர்கள், நதிகளை இணைக்க வேண்டும்என்று கோரி தஞ்சை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சரியமாகஉள்ளது என்றார் தத்தாத்ரேயா.












Click it and Unblock the Notifications