தமிழக உள்ளாட்சித் தேர்தல்முடிவுகள்
சென்னை:
சென்னையில் மிகப் பெரும் வன்முறைக்கிடையே தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தஉள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சியில் 627 காலி இடங்களுக்கு நேற்று இடைத் தேர்தல்நடந்தது. இதில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த 2 வார்டு தேர்தலில் பெரும் வன்முறைமூண்டது. அதிமுக கவுன்சிலர் சந்தோஷ் என்பவரின் கார் தீவைத்துக்கொளுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த இரண்டுவார்டுகளிலும் பதிவான வாக்குகள் மற்றும் தேர்தல்நடந்த பிற பகுதிகளில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கியது.
ஈரோடு நகராட்சி 36வது வார்டில் அதிமுகவின் ராமசாமி 264 ஓட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாமக்கல் முதல் வார்டில் திமுகவின் கனகராஜ் 12ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் அதிமுகவின் தில்சப் பேகம் 294 ஓட்டுகள்வித்தியாசத்திலும், திருச்செங்கோடு 2வது வார்டில் திமுகவின் பூங்கோதை 395ஓட்டுகள் வித்தியாசத்திலும், நிலக்கோட்டை 15வது வார்டில் அதிமுகவின் நல்லதம்பி90 ஓட்டுகள் வித்தியாசத்திலும்,
சிவகாசி 20வது வார்டில் திமுகவின் கரீம் கனி 84 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 26வதுவார்டில் அதிமுகவின் பால்ராஜ் 151 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.
மேலூர் நகரசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications