கூவாகம்: தாலி அறுத்து அரவாணிகள் அழுகை!
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் களப்பலி இன்று நடந்தது. இதைத் தொடர்ந்து அரவாணிகளுக்கு தாலிஅறுக்கப்பட்டு அவர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நேற்று இரவு நடந்தது. இதையடுத்து இரவுமுழுவதும் அரவாணிகள் கும்மி அடித்து பாட்டுப் பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இன்று காலை அரவாண் களப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அரவாணிகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாலிகளைஅறுத்த அரவாணிகள், பொட்டை அழித்தும், பூவை அறுத்தெரிந்தும், வெள்ளைச் சேலை கட்டியும் கட்டிப் பிடித்து ஒப்பாரிவைத்து அழுதனர்.
இந்த நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா முடிவடைந்தது. அரவாணிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த விழாவின் போதுமிஸ் கூவாகம் 2005, ஆடை அலங்காரப் போட்டிகள் ஆகியவை அரவாணிகளுக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.