அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கும்மிடிப்பூண்டியில்விஜயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்த அதிமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள் பொன்னையன், கருப்பசாமி, நைனார் நாகேந்திரன், சோமசுந்தரம், அண்ணாவி, மில்லர், இன்பத்தமிழன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில், வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மைதிலி வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.
அதேபோல, திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் விஜயக்குமார், அங்கிருந்து ஊர்வலமாகஅழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன்,பாண்டுரங்கன், வளர்மதி,
சி.வி.சண்முகம், துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர்ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில், துணை ஆட்சியர் பிச்சம்மாளிடம் வேட்பு மனுவை விஜயக்குமார் தாக்கல் செய்தார்.