For Daily Alerts
Just In
கருணா ஆதரவாளர்கள் தாக்குதல்: 4 புலிகள் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் கருணா ஆதரவாளர்களின் திடீர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கருணா ஆதரவாளர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டக்களப்புமாவட்டத்திலுள்ள கஞ்சிக்குழச்சாறு என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதேபோல வலைசிசேனா என்ற இடத்தில் நடந்த மோதலில் கருணா ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அடையாளம்தெரியாத நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 1 ஆண்டில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 230 பேர் பலியாகி உள்ளதாக இலங்கை ராணுவம்கூறுகிறது.
Comments
Story first published: Friday, April 22, 2005, 5:30 [IST]