For Daily Alerts
Just In
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை:
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கியநிகழ்ச்சிகளில் ஒன்றாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது.
சுந்தரேஸ்வரராக மணிகண்ட பட்டரும், மீனாட்சி அம்மனாக ராஜப்பா பட்டரும் அமர்ந்திருக்க திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தேறியது. இந்த விழாவையொட்டி மதுரையில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்குவிந்திருந்தனர்.ஞணூ>
நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
Comments
Story first published: Friday, April 22, 2005, 5:30 [IST]