ஆக்கிரமிப்பு கோவில்களை இடிக்க தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தென் மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கு மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி தென் மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மதுரையில்ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இது மதுரை மக்களுக்கு பெரும்அதிர்ச்சியைக் கொடுத்தது.

மதுரையைப் போலவே தற்போது மற்ற தென் மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்இந்து விழிப்புணர்வு இயக்க மாநில பொறுப்பாளரான கொடைக்கானலைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், இந்துக்களின் கோவில்களை இடிப்பதற்கு தடை விதிக்கவேண்டும். தென் மாவட்டங்களில் ஏராளமான கோவில்கள்உள்ளன. இவை மிகவும் பழமை வாய்ந்தவை ஆகும். 2 கோடி பக்தர்கள் அந்தக் கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தினருக்கு எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் அதிகாரிகள் இடித்துத் தள்ளுகிறார்கள். இதுஅரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்கள், 13 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பியது.

இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு முடியும் வரை தென் மாவட்டங்களில்கோவில்களை இடிக்க கூடாது என்று கூறி தடை விதித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+