For Quick Alerts
For Daily Alerts
Just In
அவதூறு வழக்கு: வெற்றிகொண்டான் சரண்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் கடந்த மார்ச் 31ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்கள்வெற்றிகொண்டான், மலர்மன்னன் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
இந் நிலையில் வெற்றி கொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரமராஜ் முன்னிலையில் சரணடைந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வெற்றிகொண்டான் தொடர்ந்து 15 நாள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
Comments
Story first published: Friday, April 22, 2005, 5:30 [IST]