For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு வழக்கு: வெற்றிகொண்டான் சரண்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.

சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் கடந்த மார்ச் 31ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்கள்வெற்றிகொண்டான், மலர்மன்னன் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இது தொடர்பாக மலர்மன்னனை சமீபத்தில் போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். இதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் வெற்றிகொண்டானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந் நிலையில் வெற்றி கொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரமராஜ் முன்னிலையில் சரணடைந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வெற்றிகொண்டான் தொடர்ந்து 15 நாள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X