திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருவரும் வேட்பு மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். காஞ்சிபுரத்தில் மறைந்த எம்.எல்.ஏவின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டியில் கொல்லப்பட்ட சுதர்சனத்தின்மகன் விஜயக்குமாரும் அதிக சார்பில் போட்டியிடுகிறார்கள்.
நேர்காணல் முடிவடைந்ததையொட்டி நேற்று இரவே வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.அதன்படி, காஞ்சிபுரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மகன் பி.எம்.குமார் போட்டியிடுகிறார். இவர் காஞ்சிபுரம் ஒன்றியதிமுக செயலாளராக இருக்கிறார்.
கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர் பி.வெங்கடாச்சலபதி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தகும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கு இம்முறை சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications