கருணாநிதியுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப்பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் காரத் முதல் முறையாக சென்னைவந்துள்ளார். இன்று காலை அவர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடந்த 1967ம் ஆண்டு முதலே கூட்டணி நீடித்து வருகிறது. இந்தக் கூட்டணிதொடர்ந்து நீடிக்கும்.
கருணாநிதியுடன் தேசிய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன். இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவித்தேன் என்றார் காரத்.
பின்னர் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காரத் பேசுகையில், கேரளாவில்கருணாகரன் குழுவினர் புதிய ஆட்சி அமைக்க முயன்றால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தராது. காங்கிரஸ்கட்சியுடன் தேசிய அளவில் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். கேரளாவிலும் அது நிலவுகிறது.
தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவதற்கான அவசியமோ, தேவையோ இப்போது ஏற்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications