மறியல் செய்த அமைச்சர்களை நீக்க எஸ்.ஆர்.பி கோரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட11 அமைச்சர்களையும் பதவி நீக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் பர்னாலாவிடம் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள பலரும் அரசியலமைப்பு சட்டப்படி ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளுக்குமாறாக நடந்து கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மற்றவர்களைப் போல அவர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள். இந் நிலையில் அவர்கள் அமைச்சர்பொறுப்புகளில் நீடிப்பது அனைத்து ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முரணானது என்பதால் தங்களுக்குள்ள கடமையையும்,பொறுப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார் எஸ்.ஆர்.பி.












Click it and Unblock the Notifications