திண்டிவனம் அருகே விபத்து: அமைச்சரின் குடும்பத்தினர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மனைவி உட்பட 5 பேர்படுகாயமடைந்தனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மனைவி தமிழரசி, தனது குடும்பத்தினருடன் கிரிவலம் செல்வதற்காகதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டார்.
நேற்று மாலை 5 மணியளவில் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார்எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அமைச்சரின் மனைவி தமிழரசி, பார்வதி, உலகநாதன், கார்த்திக், டிரைவர் வேலுசாமிஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications