"அஆ ஷூட்டிங்கில் விபத்து: 6 பேர் படுகாயம்!
சென்னை:
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் உருவாகி வரும்" அ ஆ படப்பிடிப்பின்போது 50 அடி உயரத்திலிருந்துலைட்மேன்கள் 6 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா அவரே இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் படம் "அ ஆ (முந்தைய பி.எஃப்). இப்படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டுடியோவின் 8வது தளத்தில் நடந்தது. சூர்யாவும், ஹீரோயின் நிலாவும் பங்கேற்ற நடனக் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.
இதனால் அங்கு நின்றிருந்த 6 லைட்மேன்களும் கீழே விழுந்தனர். 6 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக வடபழனியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 6 பேரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாகஉள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது எஸ்.ஜே.சூர்யா, புதுமுகம் நிலா, ஒளிப்பதிவாளர் வேணு, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோர் சரிந்துவிழுந்த பரணின் கீழே நின்று கொண்டிருந்தார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது 6 பேரும் விழவில்லை. இதனால் இவர்கள் காயமின்றி தப்பினார்கள்.












Click it and Unblock the Notifications