கார்- லாரி மோதலில் 2000 கோழிகள் சாவு!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கறிக் கோழிகளை ஏற்றிச் சென்ற மினி லாரியும், காரும் மோதிக் கொண்டதில் லாரியில் இருந்த 2000 கோழிகள் நசுங்கி இறந்தன. 4பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டியிலிருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல,எட்டயபுரத்திலிருந்து டாக்ஸி ஒன்று கோவில்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த விபத்தில் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 2000க்கும் மேற்பட்ட கோழிகள் நசுங்கி இறந்தன. சாலையெங்கும் இறந்தகோழிகள் சிதறிக் கிடந்தன.
இந்த விபத்தில் டாக்சி டிரைவர் மூர்த்தி, மினி லாரி டிரைவர் சத்திரப்பாண்டியன், கிளீனர் மகேஷ் மற்றும் சுப்பையா ஆகியோர்படுகாயம் அடைந்தனர். நான்கு பேரில் மகேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் கோவில்பட்டி அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications