திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்
காஞ்சிபுரம்:
சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3மணியுடன் முடிவடைந்தது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர்.
திமுக வேட்பாளருடன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைருகன் ஆகியோரும்சென்றிருந்தனர்.
கும்மிடிப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளரான வெங்கடாசலபதி, திருவள்ளூரில் உள்ள துணை ஆட்சியர் பிச்சம்மாளிடம்வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டிஆறுமுகம், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பொன்னேரி சுந்தரம் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 28ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் தொகுதியில் இதுவரை 12 பேரும், கும்மிடிப்பூண்டியில் 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications