கலாம் திட்டத்தை கிடப்பில் போட்ட மத்திய அரசு!
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவித்த தேசிய அறிவியல் கழக திட்டம், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால்,கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடிப்படையில் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க இந்தியாவின் பல்வேறுபகுதிகளில் தேசிய அறிவியல் கழகம் (என்.ஐ.எஸ்) உருவாக்கப்பட வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுயோசனை தெரிவித்தார்.
புவனேஸ்வரில் உத்கல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடனும், புனேவில் புனே பல்கலைக்கழக ஒத்துழைப்புடனும் தேசியஅறிவியல் கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் விரிவான ஆய்வில் பல்கலைக்கழக மானியக் குழு ஈடுபட்டது. தேசியஅறிவியல் கழகம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 74.5 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்குப்பிறகு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இடம் தேர்வு செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் அப்படியே முடங்கி விட்டன. மத்திய அரசிடமிருந்து இதுகுறித்துஎந்த உத்தரவும் வராத காரணத்தால் திட்டம் முடங்கிப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் வரிசையில், தேசிய அறிவியல் கழகத்தை உருவாக்க அப்துல் கலாம்ஆர்வம் கொண்டிருந்தார். இந்த அறிவியல் கழகத்தில் ஐந்து ஆண்டு எம்.எஸ்.சி அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல்பாடம் கற்றுத் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேர முடியாத, அதேசமயம் திறமையான இளம் விஞ்ஞானிகளுக்கு தேசிய அறிவியல் கழகம் நல்லமாற்றாக அமையும் எனவும் கலாம் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். இருப்பினும் மத்தியஅரசின் தாமதம் மற்றும்செயல்படாத தன்மை காரணமாக இந்த அருமையான திட்டம் செயலிழந்து கிடக்கிறது.












Click it and Unblock the Notifications