ராபின்மெயின்: சிபிஐ நீதிமன்றத்தில் நாளை காளிமுத்து ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராபின்மெயின் வழக்கு தொடர்பாக தமிழக சபாநாயகர் காளிமுத்து நாளை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
வங்கிகளில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்கி மோசடி செய்ததாக ராபின்மெயின் என்பவர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக சபாநாயகர் காளிமுத்து மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.
இதையடுத்து நாளை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அப்போது காளிமுத்துஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications