For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராபின்மெயின்: சிபிஐ நீதிமன்றத்தில் நாளை காளிமுத்து ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராபின்மெயின் வழக்கு தொடர்பாக தமிழக சபாநாயகர் காளிமுத்து நாளை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

வங்கிகளில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்கி மோசடி செய்ததாக ராபின்மெயின் என்பவர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக சபாநாயகர் காளிமுத்து மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது.

பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம்அளித்த சம்மனை ரத்து செய்யக்கோரி காளிமுத்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நாளை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அப்போது காளிமுத்துஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X