மலேஷியாவில் 2 இந்திய என்ஜினியர்கள் கைது
கோலாலம்பூர்:
இந்தியாவைச் சேர்ந்த 2 சாப்ட்வேர் என்ஜினியர்கள் மலேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் முறையான விசாஇருந்தும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான எச்.சி.எல்.டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் 2 என்ஜினியர்கள் அலுவலக வேலைக்காகஇந்தியாவிலிருந்து மலேஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலேஷியா சென்ற இருவரும் கோலாலம்பூரில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருட்டுத் தனமாகமலேஷியாவில் குடியேறுபவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தன்னார்வப் படை ஒன்று அவர்களை பிடித்தது.அப்போது அவர்கள் இருவரிடமும் பாஸ்போர்ட் இல்லை என கூறப்படுகிறது.
2 என்ஜினியர்களையும் பிடித்துச் சென்ற அவர்கள் தடுப்புக் காவல் முகாமில் அடைத்தனர்.
இதையடுத்து எச்.சி.எல்.அதிகாரிகள் மலேஷிய அதிகாரிகளிடம் உண்மை நிலவரத்தை கூறிய பிறகு ஒருவரை மட்டும்விடுவித்ததாகவும், மேலும் ஒருவரை அவர்களை விடுவிக்க மறுத்து விட்டதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications