ஆசிரியை மீனாட்சி வழக்கு: நாளை இறுதி அறிக்கை தாக்கல்
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் நாளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிசிஐடி போலீஸார்இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி முதல் காணவில்லை.இதுதொடர்பாக முதலில் கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸார்விசாரணையை முடுக்கி விட்டனர். எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன், உறவினர்கள், ஜோதி ராமலிங்கம், அவரதுஉறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தீவிரவிசாரணை நடத்தியும் மீனாட்சி குறித்த எந்தத் துப்பும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. மீனாட்சி என்ன ஆனார்,உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஒரு தகவலும் கிடைக்காமல் போலீஸார் திண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இறுதி விசாரணையை தாக்கல் செய்ய நாளை வரை உயர்நீதிமன்றக் கிளை அவகாசம் கொடுத்துள்ளதால், நாளைஇறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பொருத்துத்தான் மீனாட்சி காணாமல் போன வழக்கின் கதி என்னவென்றுதெரிய வரும்.












Click it and Unblock the Notifications