ஏர் பஸ்-380 வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பிளாக்நாக்:
![]() |
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 இன்று வெற்றிகரமாக வானில் பறந்தது.
பிரான்சின் ஏர் பஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விமானத்தில் 555 பயணிகள் பயணிக்க முடியும். 4 என்ஜின்கள் கொண்ட இந்தவிமானம் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பறந்தது.
டெல்லஸி விமான நிலையத்தில் இருந்து அதிக ஓசையின்றி புறப்பட்ட இந்த விமானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பலத்தகரகோஷத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
இந்த விமானத்தைத் தயாரிக்க ஏர் பஸ் நிறுவனம் 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 13 பில்லியன் டாலர் செலவில் இந்தவிமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
1969ல் முதல் முதலாகப் பறந்த கன்கார்ட் விமானத்துக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ள மிகப் பெரிய விமானசாதனை இது தான்.













Click it and Unblock the Notifications