For Daily Alerts
Just In
தேர்தல் வன்முறை: 10 திமுகவினருக்கு முன்ஜாமீன்
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுக கவுன்சிலர் கார் எரிக்கப்பட்ட வழக்கில்திமுகவினர் 10 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டு எண்கள் 110, 131 ஆகியவற்றில் கடந்த 19ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. அப்போது ஏற்பட்டவன்முறையின் போது அதிமுக கவுன்சிலரின் குவாலிஸ் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 10 திமுகவினர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி முருகேசன், ரூ. 15,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகையிலான இரு நபர் ஜாமீனும் செலுத்திமுன்ஜாமீன் பெறலாம் என்று தீர்ப்பளித்தார்.
ஜாமீனில் விடுதலையான பிறகு 10 பேரும் விழுப்புரத்தில் தங்கி அங்குள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் தினசரி ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
Comments
Story first published: Wednesday, April 27, 2005, 5:30 [IST]