சங்கரராமன் வழக்கு: ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஜூன் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்பட்டு வந்த சங்கரராமன் கொலை வழக்கு, குற்றப்பத்திரிக்கை தாக்கலுக்குப் பின்னர் தற்போது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
27ம் தேதி (இன்று) செங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இன்றுசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி அக்பர் அலி முன்புஆஜராயினர்.
அவர்களுக்கு ஸ்டூல்கள் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அதில் அமருமாறு கூறினார். இதையடுத்து இருவரும் அமர்ந்தனர்.
அதே போல இந்த வழக்கில் கைதாகி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் நீதிபதி முன்ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகு மட்டும் தாமதமாக அழைத்து வரப்பட்டார்.
ஆனால் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.அன்றைய தினம் அனைத்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர்கள், விசாரணையை ஜூன் 16க்கு முன்பே நடத்த வேண்டும் என்றார். ஆனால், அந்தக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இந்த வழக்கின் ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சரி பார்க்கப்பட்ட பின்னர் வழக்கு, முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுமா அல்லது கூடுதல் செஷன்ஸ் அல்லது விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பதைநீதிபதி அறிவிப்பார்.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் மே 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துசைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி இன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications