For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் குரலால் மிரண்ட ஜெ: கருணாநிதி கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய வீராணம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது, மக்கள் குரலைப் பார்த்து மிரண்டு போய்எடுத்த முடிவு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம்சாத்தியமானதல்ல என்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. அப்போது அதைஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை.

இதேபோல, அப்பகுதி விவசாய சங்கங்களும், பொதுமக்களும், விவசாயிகளும் இத்திட்டத்தை வாபஸ் பெறக்கோரி பலமுறைகுரல் கொடுத்தனர். ஆனால் அப்போதெல்லாம் செவி சாய்க்காத ஜெயலலிதா, அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது பெரும்பாதிப்பு ஏற்படுமே என்ற நினைப்பு வந்ததும், இத்திட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனவே இது மக்கள் குரலுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவல்ல, மாறாக மிரண்டு போய் எடுத்த முடிவு.

லாலு விவகாரத்தில் பாஜகவினர் நடந்து கொள்ளும் முறை சரியானதல்ல. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதுகுற்றச்சாட்டு பதிவாகியிருப்பதால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று வாஜ்பாயோ அல்லது அத்வானியோ கோரிக்கைவிடுக்காதது ஏன்?

சங்கரராமன் கொலை வழக்கில் இரு சங்கராச்சாயார்களுக்கும் குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சங்கரமடபதவியில் நீடிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X