மக்கள் குரலால் மிரண்ட ஜெ: கருணாநிதி கிண்டல்
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது, மக்கள் குரலைப் பார்த்து மிரண்டு போய்எடுத்த முடிவு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம்சாத்தியமானதல்ல என்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. அப்போது அதைஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே இது மக்கள் குரலுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவல்ல, மாறாக மிரண்டு போய் எடுத்த முடிவு.
லாலு விவகாரத்தில் பாஜகவினர் நடந்து கொள்ளும் முறை சரியானதல்ல. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதுகுற்றச்சாட்டு பதிவாகியிருப்பதால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று வாஜ்பாயோ அல்லது அத்வானியோ கோரிக்கைவிடுக்காதது ஏன்?
சங்கரராமன் கொலை வழக்கில் இரு சங்கராச்சாயார்களுக்கும் குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சங்கரமடபதவியில் நீடிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications