For Daily Alerts
Just In
அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- வாசன்
சென்னை:
சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான தமிழக அமைச்சர்கள் அவர்களாகவே பதவியை விட்டு விலகவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கடும்கண்டனத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஆளாகியுள்ளார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்தை ஏற்று உடனடியாக அவர்கள் பதவி விலகுவதுதான் நல்லது.
சட்டசபை இடைத் தேர்தலில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்றார் வாசன்.
Story first published: Wednesday, April 27, 2005, 5:30 [IST]