For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- வாசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான தமிழக அமைச்சர்கள் அவர்களாகவே பதவியை விட்டு விலகவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாலை மறியல் செய்து உயர்நீதிமன்றத்தின் கடும்கண்டனத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஆளாகியுள்ளார்கள்.

நியாயமான அணுகுமுறையை அவர்கள் பின்பற்றுவார்களேயானால் அவர்களாக பதவியை விட்டு விலக வேண்டும். ஆனால்சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் ஜனநாயக மரபுகளை மதிக்காத அவர்கள், அவர்களாகவே பதவியை விட்டுவிலகுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் அது தவறாகத்தான் இருக்கும்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்தை ஏற்று உடனடியாக அவர்கள் பதவி விலகுவதுதான் நல்லது.

சட்டசபை இடைத் தேர்தலில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்றார் வாசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X