For Quick Alerts
For Daily Alerts
Just In
சுனாமி பகுதிகளில் இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதல் நடந்தது. இதையடுத்து சுனாமி பாதித்த கடலோரமாவட்டங்களில் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இதில் 12ம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தன. இன்று முதல் பத்தாவது வகுப்புத் தேர்வு தொடங்கியது. மொத்தம் 138மையங்களில் 16,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள். மே 9ம் தேதி வரை இத் தேர்வுகள்நடைபெறுகின்றன.
Comments
Story first published: Thursday, April 28, 2005, 5:30 [IST]